ADDED : செப் 15, 2011 09:19 PM
சிவகங்கை : மதுரையில் நடந்த யோகா போட்டியில், சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக்., பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.
மதுரையில் 16வது மாநில யோகா போட்டி நடந்தது. இதில், சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக்.,பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வியான்னி அருட்பணி மைய இயக்குனர் சகாயராஜ், தலைமை சகோதரி சிரியபுஷ்பம், பள்ளி முதல்வர் வீணா பாராட்டினர்.