ADDED : செப் 05, 2011 11:53 PM
ஓசூர் : ஓசூரில், மூன்று குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
ஓசூர் ராம்நகர் ராஜா. இவரது மனைவி மாலா(26). திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலாவுக்கும் அவரது தாய் லட்சுமியம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த மாலா, விஷம் குடித்து தற்கொலை செய்தார். டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.