ADDED : ஜூலை 13, 2011 01:34 AM
கிள்ளை : கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி சி.முட்லூர் அரசு
கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.
சிதம்பரம் அருகே
சி.முட்லூர் அரசு கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவர் மாணவர்களை
பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்தும், கல்வி உதவித் தொகையை
விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை
மாணவர்கள் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமையில்
வகுப்பை புறக்கணித்தனர். செயலாளர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி
பேசினார்.