ADDED : ஆக 05, 2011 03:13 AM
கடலூர் : கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் கட்சியின் 18ம்
ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது.ஒன்றிய செயலர்
தில்லை தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர் ராமலிங்கம், அரசியல் ஆய்வு மைய
செயலாளர் செந்திலதிபன், வெளியீட்டு அணி செயலர் வந்தியதேவன் ஆகியோர்
விருதாங்கநல்லூர், தென்பாதி, வாழக்கொல்லை, பரிபூரணநத்தம் உள்ளிட்ட
கிராமங்களில் கட்சி கொடியை ஏற்றினர்.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.