ADDED : ஜூலை 27, 2011 11:11 PM
சிதம்பரம் : சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் அறிவியல் கண்காட்சி நடந்தது.தலைமை ஆசிரியர் சிங்காரவேலு தலைமை தாங்கினார்.
மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் சபாநாயகம் கண்காட்சியை துவக்கி வைத்தார்.கண்காட்சியில் மாணவர்கள் வைத்துள்ள காற்றாலை மின்சாரம், நிலம் மாசுபடுதல், காற்று மாசுபடுதல், லெமன் பேட்டரி, உருளை பேட்டரி ஆகிய படைப்புகளுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு வேதியியல் ஆண்டாக கொண்டாடும் வகையில் ஆசிரியை கவுசல்யா, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.