Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்.,

ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்.,

ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்.,

ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்.,

ADDED : ஜூலை 13, 2011 10:19 PM


Google News

தேனி : ரேஷன் கார்டு அச்சிடும் போதே சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குளறுபடிகளை தவிர்க்க, ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போதே அவர்களின் மொபைல் போன் நம்பர்களும் விண்ணப்பத்தில் பெறப்படுகின்றன. விசாரணை முடிந்து அந்தந்த மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் அச்சிடும் போது, இதுபற்றிய தகவல் பயனாளிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. எஸ்.எம்.எஸ்., வந்த ஒரு வாரத்தில் சம்மந்தப்பட்ட பயனாளி தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ள முடியும்.விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பமும் இனி இல்லை. பொதுமக்கள் வீணாக அலைவதை தடுக்க இந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us