/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கட்டிய மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதம்கட்டிய மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதம்
கட்டிய மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதம்
கட்டிய மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதம்
கட்டிய மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதம்
ADDED : ஆக 24, 2011 12:15 AM
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி விலக்கு ரோட்டில் கட்டிய
மூன்று மாதத்தில் குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. குடிநீர் சப்ளை
செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதி மக்களின் தண்ணீர்
தேவையை பூர்த்தி செய்ய போதுமான மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் இல்லாததால்,
தேரிருவேலி விலக்கு ரோட்டில் 5 லட்ச ரூபாயில் மூன்று மாதங்களுக்கு முன்
மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கபட்டது. தண்ணீர் கசிவு ஏற்பட்டு,
ரோட்டோரங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
கந்தசாமிபுரம், காமராஜர்புரம், போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதி மக்களுக்கு தண்ணீர்
கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொட்டியில் பழுது நீக்கி குடிநீர்
வழங்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.