ADDED : செப் 06, 2011 10:44 PM
தேவதானப்பட்டி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., வினர், தங்களின் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர்.
அடுத்த மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., சார்பில் பேரூராட்சி, நகராட்சி களின் வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்க அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் உள்ள ஆ.தி.மு.க., வினர் சுறுசுறுப்படைந்துள்ளனர். மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டிட விரும்பும் நபர்கள், மாவட்ட தலைமையிடம் சீட் வாங்குவதற்காக தங்களின் ஆதரவாளர்களை திரட்டி சென்று மனு கொடுத்து வருகின்றனர்.