ADDED : செப் 09, 2011 01:34 AM
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க., சார்பில் கவுன்சிலர்கள் இருவர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர்.
தி.மு.க., சார்பில் மாநகராட்சியில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பொறுப்பாளர் சுப்பிரமணியம் பெறுகிறார். மாஜி கவுன்சிலர் பாக்கியநாதன், கவுன்சிலர் ஜெகநாதன் மேயர் பதவிக்கு நேற்று விருப்ப மனு அளித்தனர். 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலில், இதுவரை 30 பேர் மட்டும் கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு அளித்துள்ளனர். மேயர் பதவிக்கு ஆறு பேர் விருப்ப மனு செய்துள்ளனர்.


