பழநி:தாமரைக்குளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி(32).
இவர், அழகாபுரி மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பழநி தாலுகா போலீசார், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சையதுஇப்ராகிம்பாதுஷா வை கைது செய்தனர்.


