/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வாக்காளர் பணி: பணம் கிடைக்காமல் அவதிவாக்காளர் பணி: பணம் கிடைக்காமல் அவதி
வாக்காளர் பணி: பணம் கிடைக்காமல் அவதி
வாக்காளர் பணி: பணம் கிடைக்காமல் அவதி
வாக்காளர் பணி: பணம் கிடைக்காமல் அவதி
ADDED : ஜூலை 26, 2011 11:04 PM
சிவகங்கை:வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்த்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உழைப்பூதியம் வழங்கவில்லை,''என, தமிழக ஆசிரியர் மன்ற திருப்புவனம் ஒன்றிய செயலாளர் ஜஸ்டின் ஆரோக்கியசாமி தெரிவித்தார்.கடந்த சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில், பெயர் சரிபார்த்தல், நீக்கம், திருத்தப்பணிகள் நடந்தது.
இதில் ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பணி முடிந்த நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தலா 3,000 ரூபாய் உழைப்பு ஊதியமாக வழங்கப்பட்டது. நிலை அலுவலர்களாக நியமித்த ஆசிரியர்களுக்கு, மதிப்பூதியம் வழங்கவில்லை. இப்பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.