ADDED : ஜூலை 24, 2011 02:45 AM
கூடலூர் : 'கூடலூரில் மலேரியா நோய் பாதிப்பு இல்லை,' என கோவை பூச்சியியல் மருத்துவ குழு ஆய்வில் தெரிய வந்தது.நீலகிரி மாவட்ட பொது சுகாதார துறை சார்பில், கூடலூரில் மலேரியா நோய் குறித்து இரண்டு நாள் பரிசோதனை முகாம் நடந்தது.
முதல் நாள் முகாமுக்கு மாவட்ட மலேரியா அலுவலர் கபாலி தலைமை வகித்தார். கோவை மண்டல பூச்சியல் குழு ஆய்வாளர்கள் கனகராஜ், தாமோதரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் நோயாளிகளின் ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர்.இரண்டாவது நாள் கூடலூர் நகர அரசு மருந்தகத்தில் நடந்த முகாமில் சிகிச்சைக்கு வந்த நோயாளிக ளின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். சோதனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வந்த யாருக்கும் மலேரியா நோய் இல்லை என தெரிய வந்தது. முகாமில் ஆரம்ப சுகதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம்,மருதமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.


