Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு

பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு

பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு

பிடாகம் மணல் குவாரியில் லாரிகளின் அணிவகுப்பு

ADDED : ஜூலை 23, 2011 11:55 PM


Google News

விழுப்புரம் : பிடாகம் குவாரியில் உள்ளூர் டிராக்டர்களுக்கு மணல் அள்ள டோக்கன் வழங்காததால் உரிமையாளர்கள் அனைத்து லாரிகளையும் வழிமறித்து நிறுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் தென்பெண்ணை ஆற்றில் பொதுப் பணித்துறை சார்பில் இயங்கிய மணல் குவாரி சில தினங்களுக்கு முன்பு லாரி டிரைவர்களின் பிரச்னையால் தற்காலிகமாக நிறுத்தினர். இதனால் வெளியூர் லாரிகள் அருகிலுள்ள பிடாகத்திற்கு செல்ல துவங்கின. இங்கும் உள்ளூர் லாரி, டிராக்டர்களுக்கு மட்டும் மணல் அள்ள டோக்கன் வழங்கினர். இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் டிரைவர்களிடையே சில தினங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டு, பொதுப் பணித் துறையினர் சரி செய்தனர்.



பிடாகம் குவாரியில் அருகிலுள்ள அத்தியூர் திருவாதி, குச்சிப்பாளையம், வேலியம் பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 50 டிராக்டர்கள் மூலம் உள்ளூரைச் சேர்ந்த வர்கள் மணல் அள்ளுகின்றனர். பாஸ் வைத்திருந்தும் கடந்த 21ம் தேதி முதல் இந்த கிராமங்களைச் சேர்ந்த டிராக்டர்களுக்கு மணல் அள்ள டோக்கன் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் பயனில்லாததால் உள்ளூர் டிராக்டர் உரிமை யாளர்கள் 50 பேர், தொழிலாளர்கள் 40 பேர் உட்பட 90 பேர் நேற்று காலை 10 மணி முதல் பிடாகம் குவாரிக்கு வந்த வெளியூர் லாரிகளை நிறுத்தினர். இதனால் 200க்கும் மேற்பட்ட வெளியூர் லாரிகள் மதியம் வரை மணல் அள்ள முடியாமல் அணி வகுத்தன. தகவலறிந்த பொதுப் பணித் துறை அதிகாரிகள் மதியம் 2 மணிக்கு உள்ளூர் டிராக்டர் உரிமையாளர்களிடம் பேசி, வரும் 25ம் தேதி சுமூக முடிவு எடுப்பதாக கூறினர். இதையடுத்து மதியம் 2.10 மணிக்கு பிறகு வெளியூர் லாரிகளில் மணல் ஏற்றிச் சென்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us