ADDED : ஜூலை 15, 2011 09:57 PM
காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனை, ஜே.சி.ஐ., அமைப்பு இணைந்து கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாமை நடத்தின.
மருத்துவ அலுவலர் பூங்கோதை தலைமை வகித்தார். டாக்டர்கள் அருள்தாஸ், அரவிந்த்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். வட்டார மேற்பார்வையாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


