Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு

மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு

மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு

மதுபானம் திடீர் விலையேற்றம் : டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு

ADDED : ஜூலை 11, 2011 08:15 PM


Google News
திருநெல்வேலி: டாஸ்மாக் மதுபான கடைகளில் திடீர் விலையேற்றத்தை மதியம் அமல்படுத்தியதால் விற்பனையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் முதல் சரக்குகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 20 ரூபாய் வீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விலையேற்றத்தை இரவு 10 மணிக்கு அறிவித்து மறுநாள் காலையில் இருந்து புதிய விலை அமல்படுத்தப்படும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் புதிய விலை பிற்பகல் 4 மணிக்குபேக்ஸ் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. காலையில் ஏற்கனவே விற்ற சரக்குகளுக்கும் புதிய விலையிலேயே கணக்கு தரும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பாட்டில் விற்பனை செய்து, புதிய விலையில் கணக்கு கொடுத்தால் 2 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றார்கள். இதனால் இரவில்விலையேற்றத்தை விடவும் அதிக விலைக்கு சரக்கு விற்கப்பட்டது. இதனால் குடிமக்கள் அவதியுற்றனர்.டாஸ்மாக் அதிகாரிகள் விலையேற்றத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஊழியர்கள், குடிமக்கள் என இரு தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us