Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

மாவட்ட அளவில் இறகுப்பந்து போட்டி கோவை, விருதுநகர் அணிகள் சாம்பியன்

ADDED : செப் 29, 2011 10:05 PM


Google News
திருப்பூர் : மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் இறகுப்பந்து போட்டி, திருப்பூர் மாவட்ட பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பில், ராயபுரம் ஆல்பின் கிளப்பில் நடந்தது.இறுதி போட்டி நேற்று நடந்தது.

ஜூனியர் ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் விருதுநகர் அணியின் சுதர்சன், மதுரை அணியின் சூர்யபிரகாஷ் களமிறங்கினர்; முதல் சுற்று ஆட்டத்தில் 21-13 புள்ளிகள்; இரண்டாவது சுற்றில் 21-15 புள்ளிகள் பெற்று விருதுநகர் அணி முன்னிலை வகித்தது.இரட்டையர் பிரிவில் சுதர்சன், அசோக்குமார் ஜோடி - சூர்யபிரகாஷ், யஸ்வந்த் ஜோடியை எதிர்கொண்டு ஆடியது. முதல் சுற்றில் 23-21; இரண்டாம் சுற்றில் 20-22; மூன்றாவது சுற்றில் 21- 16 புள்ளிகள் பெற்று சுதர்சன், அசோக்குமார் ஜோடி வெற்றி பெற்றது; ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் 2-0 என்ற செட் கணக்கில் விருதுநகர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜூனியர் பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் கோவை அணியை சென்னை அணி எதிர்கொண்டது. கோவை அணி சார்பில் ஆதித் அனந்தா - மதுரை அணி சார்பில் சுருதி ஆடினர். முதல் சுற்று ஆட்டத்தில் 21-10; இரண்டாவது சுற்றில் 21-16 புள்ளிகள் பெற்று கோவை அணி முன்னிலை வகித்தது. இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், கோவை ஆதித் அனந்தா, விகாசினி ஜோடி - சென்னையின் நிக்கிதா, சுருதி ஜோடியை எதிர்கொண்டு ஆடியது; முதல் சுற்று ஆட்டத்தில், 21-4; இரண்டாவது சுற்றில் 21-9 புள்ளிகள் பெற்று கோவை அணி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us