ADDED : ஜூலை 14, 2011 12:06 AM
கள்ளக்குறிச்சி : பஸ் நிலையத்தில் மயங்கி கீழே விழுந்து முதியவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை(55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு திடீரென மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


