ADDED : ஆக 28, 2011 11:06 PM
சிதம்பரம் : விவசாயிகளுக்கு அக்மார்க் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடியில் வேளாண் விற்பனைத்துறை சார்பில் வேளாண் வணிக பொருட்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு குழு சார்ந்த சுய தொழில் குறித்தும், வணிகம் குறித்தும் வேளாண் அலுவலர் சித்ரா பயிற்சியளித்தார். வேளாண் அலுவலர் பிரமேலதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் ராயப்பநாதன், ரமேஷ், ராயர் செய்திருந்தனர்.