சாரண ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சாரண ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
சாரண ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : செப் 20, 2011 12:55 AM
தர்மபுரி: தர்மபுரி டான் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சாரண ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு குன்னூரில் குருளையர் மற்றும் நீலப்பறவையின் அடிப்படையில் பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற தர்மபுரி மாவட்ட சாரண, சாரணியர் ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டும் விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட சாரண ஆணையர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மகேஸ்வரி பயறிஞூசி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட சாரண செயலாளர் பிலப்ஜெசதீசன் அனைவரையும் பாராட்டினார். மாவட்ட பயிற்சி ஆணையர் பாலசுந்தரம், மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் தனபாலன், மாவட்ட உதவி செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட உதவி செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


