ADDED : ஜூலை 14, 2011 12:09 AM
செஞ்சி : செஞ்சி அரசு மருத்துவமனை வளாகத்தை பா.ம.க., இளைஞர் அணியினர் சுத்தம் செய்தனர்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஏற்பாட்டின்படி பா.ம.க., இளைஞரணியின் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அய்யனார் தலைமையில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் சீனுதமிழ்ச்செல்வன், இளைஞரணி நிர்வாகிகள் ஆறுமுகம், ரகுபதி, பெருமாள், பொறியாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செடி, கொடிகளை வெட்டி சுத்தம் செய்தனர்.


