ADDED : செப் 06, 2011 01:39 AM
மேலூர் : மேலூர் அருகில் உள்ள கூலானிபட்டியைச் சேர்ந்த ராஜாமுகமது, சிக்கந்தர் ஆகியோர் பால் வியாபாரம் செய்து வந்தனர்.
இதில், சிக்கந்தர் மனைவியுடன் ராஜா முகமதுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் ராஜாமுகமது, அவரது தம்பி ஜெ.சிக்கந்தர், மற்றும் பெற்றோரை சிக்கந்தர் குடும்பத்தினர் தாக்கினர். உள்ளூர் பிரமுகர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜெ. சிக்கந்தர், 23, வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். மதுரையில் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி., இறுதி ஆண்டு படித்து வந்த அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர்கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நான்கு பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


