மூதாட்டி இறந்துவிட்டதாக போலி ஆவணம்
மூதாட்டி இறந்துவிட்டதாக போலி ஆவணம்
மூதாட்டி இறந்துவிட்டதாக போலி ஆவணம்
ADDED : ஆக 22, 2011 02:20 AM
காஞ்சிபுரம் : உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்து விட்டதாகக் கூறி, அவரது
நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, மோசடி செய்து விற்ற வழக்கில்,
ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.பெங்களூருவில் வசித்து வருபவர்
பங்கஜம்மாள், 55.
இவரது மகன் ஷியாம்சுப்ரமணி. இவர் அமெரிக்காவில் வசித்து
வருகிறார். இருவருக்கும் தலா 11 சென்ட் நிலம், செங்கல்பட்டு அடுத்த
பட்டிபுலம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை, 1994ல் வினோத்குமார் ரெட்டி,
ஆனந்தராவ் ஆகியோரிடமிருந்து வாங்கியுள்ளனர்.கடந்த 2009ல், கொளத்தூர்
ஏழுமலை நகரில் வசிக்கும் நாகப்பன், புதுச்சேரி திருநள்ளார் முப்பையதங்குடி
கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், 39, ஆகியோர் சேர்ந்து, பங்கஜம்மாள் மற்றும்
அவரது மகன் பெயரிலிருந்த நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.
உயிரோடிருக்கும் பங்கஜம்மாள் இறந்துவிட்டதாகவும், ஷியாம்சுப்ரமணி, 22
சென்ட் நிலத்தை விற்க, நாகப்பன் என்பவருக்கு பொது அதிகாரம்
வழங்கியதுபோலவும், போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.பின்னர் நாகப்பன் அந்த
நிலத்தை, பாண்டியனுக்கு, 14 லட்சத்து, 38 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு விற்றது
போல், கிரயப்பத்திரம் தயார் செய்து, பதிவு செய்துள்ளனர். அதன்பின் அந்த
இடத்தை, 22 லட்சம் ரூபாய்க்கு விற்க, தங்கராஜ் என்பவருடன் ஒப்பந்தம்
செய்துள்ளனர்.அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் தாயகம் திரும்பிய,
ஷியாம்சுப்ரமணி தங்கள் நிலம் மோசடி செய்யப்பட்டிருப்பதைக் கண்டார்.
காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில்,
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனவேல், சப்-இன்ஸ்பெக்டர்
பாபு ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் நிலம்
மோசடியாக விற்கப்பட்டது தெரிந்தது. அதைத் தொடர்ந்து பாண்டியனை கைது
செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.