/உள்ளூர் செய்திகள்/மதுரை/கப்பலூர் பாலத்தில் கார் எரிந்து சாம்பல்கப்பலூர் பாலத்தில் கார் எரிந்து சாம்பல்
கப்பலூர் பாலத்தில் கார் எரிந்து சாம்பல்
கப்பலூர் பாலத்தில் கார் எரிந்து சாம்பல்
கப்பலூர் பாலத்தில் கார் எரிந்து சாம்பல்
ADDED : ஆக 15, 2011 01:47 AM
திருமங்கலம் : திருமங்கலம் கப்பலூர் பாலத்தில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.
கோவையை சேர்ந்தவர் தங்கராஜ் (47). தனியார் நிறுவன மேலாளரான இவர் நேற்று (கே.ஏ., எம்.பி., 7252) ஸ்கார்பியோ காரில் குடும்பத்தினருடன் சிவகாசி உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கப்பலூர் பாலத்தில் சென்றபோது காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது. உடனடியாக தங்கராஜ் குடும்பத்துடன் கீழே இறங்கினார். காரின் முன்பகுதியை திறந்த போது தீ பிடித்து எரிந்தது. திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


