ADDED : ஆக 05, 2011 10:15 PM
கீழக்கரை:தமிழகத்தில் 2001 முதல் 2006 வரை 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில்
அமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களின் மோசமான நிலை குறித்து அறிந்த
முதல்வர் அவற்றை மூன்று மாதங்களுக்குள் சீரமைக்க உத்தரவிட்டார்.
திருப்புல்லாணி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகங்கள்
விரைவில் சீரமைக்கப்படும் என கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை
கூறினார்.


