/உள்ளூர் செய்திகள்/சென்னை/விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறதுவிதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது
விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது
விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது
விதிமீறல் கட்டடங்களை சீல் வைப்பது எப்போது? :கண்காணிப்புக்குழு 13ம் தேதி ஆய்வு செய்கிறது
சென்னை : விதிமீறல் கட்டடங்களை, சீல் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அமலாக்கம் குறித்து, ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுவின் கூட்டம், 13ம்தேதி நடைபெறவுள்ளது.
வரன்முறை செய்ய முயற்சி: இதில், 48 கட்டடங்களில், 11 கட்டடங்கள் வரன்முறை செய்ய தகுதி பெற்றுள்ளதாகவும், இவற்றை தவிர்த்து, மற்ற கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதில், தங்களுக்கு எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை என, கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இதில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் சார்பில், கடந்த 26ம் தேதி வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில், 'இடிப்பு ஆணைக்குபின், சில விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த கண்காணிப்புக்குழு, 12 கட்டடங்களை வரன்முறை செய்ய இசைவு அளித்துள்ளது.
சில பகுதிகள், அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றாத மூன்று கட்டடங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மீதமுள்ள, ஒன்பது கட்டடங்கள் மீதான மேல் நடவடிக்கை குறித்து, கண்காணிப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டதில், எந்தெந்த கட்டடங்கள் எதன் அடிப்படையில், வரன்முறை செய்யப்படுகின்றன என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. கண்காணிப்புக்குழு கூட்டம்: இந்த நிலையில், கண்காணிப்புக் குழுவின் கூட்டம், வரும் 13ம்தேதி நடைபெறவுள்ளது. முந்தைய கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டன; எத்தனை கட்டடங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது; குறிப்பிட்ட சில கட்டடங்களை வரன்முறை செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை; சிறப்பு அதிரடிப்படை அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து, ஆய்வு செய்யப்படும்.
இவை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி ஆகியவை, அறிக்கை
வி.கிருஷ்ணமூர்த்தி