தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு
தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு
தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு
தேனி மாவட்டம், சின்னமனூர் வனச்சரகத்தின் சோலை காட்டில் 100 அடி உயரத்திற்கு வளர்ந்த பெரிய மரங்கள், தனியார் எஸ்டேட் ஊழியர்களின் வழிபாதைக்காக அழிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை இந்த காட்டிற்கு பின்புறம் உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் கேரள மாநிலத்தை சேர்ந்த யானைகள் சோலை காட்டிற்கு வந்து தஞ்சம் புகும்.
இது குறித்து பெயர் கூற விரும்பாத இயற்கை ஆர்வலர் கூறியதாவது: சோலைகாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டிய சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மரங்களை தவிர்க்க முடியாத காரணத்திற்காக வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அதற்கான நடைமுறையிலுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக பத்து புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, மரங்களை பேணிக்காப்பதிலும், புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். தனியார் எஸ்டேட் ஊழியர்கள் நடந்து செல்வதற்காக மரங்களை வெட்டியது மிகவும் அராஜகமான செயல். மரம் வெட்டிய நபர்களையும், அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, தண்டனை வழங்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்-