ADDED : ஆக 03, 2011 09:58 PM
சிதம்பரம் : மாநில போட்டிகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு சிறப்பு கராத்தே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
மாநில அளவிலான தேக்வாண்டோ கராத்தே போட்டி நாகப்பட்டினத்தில் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதனையொட்டி சிதம்பரம் தேக்வாண்டோ மைய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தேக்வாண்டோ சங்க பொருளாளர் ஏழுமலை, மைய பயிற்சியாளர் ஹரிகரன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.