Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

ADDED : ஆக 19, 2011 06:46 PM


Google News
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்ந்தன. அதிகாலை 5.25 மணிக்கு கோயில் வளாக செப்புக்கொடிமரத்தில், அரிகர சுப்பிரமணிய பட்டர் ஆவணித் திருவிழா துவக்க கொடியேற்றினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு பால், இளநீர், விபூதி,மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 12 நாள் திருவிழாவில் தினமும் சுவாமி - அம்பாள் சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் திருவிழாவான, ஆக.,28ம் தேதி காலை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us