ADDED : ஜூலை 11, 2011 10:40 PM
ஊட்டி : ஓய்வூதியம் வழங்க மனு அளிக்கப்பட்டது.உப்பட்டி புஞ்சவயல் பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளாயி, வெள்ளாச்சி, கொய்மா ஆகியார் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், உப்பட்டி புஞ்சவயல் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகளுக்கு ஓய்வூதியம் இது நாள் வரை வழங்கப்படாததால், உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.