ADDED : ஜூலை 11, 2011 11:53 PM
வேலூர் : மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் டேனியல் சிலமணிநேரங்களில் புதுச்சேரி போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
டேனியல், தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவர்களது காரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், இவர்களை கடத்திச் சென்றுவிட்டனர். புதுச்சேரி போலீசார் எடுத்த துரித முயற்சியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தலைமைறைவான மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.