ADDED : செப் 05, 2011 11:48 PM
கடலூர்: ஸ்டவ் அடுப்பில் தண்ணீர் சுடவைத்தவர் தீப்பிடித்து உடல் கருகி இறந்தார்.
நெய்வேலி அடுத்த தென்குத்து புதுநகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 30. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பில் தண்ணீர் சுட வைத்தார். அப்போது அவர் மீது திடீரென தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.