/உள்ளூர் செய்திகள்/சென்னை/பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்
பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்
பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்
பாடநூல் கழகக் கிடங்கிற்கு படையெடுக்கும் பாம்புகள் : அச்சத்தில் ஊழியர்கள்
தரமணி : தமிழ்நாடு பாடநூல் கழகக் கிடங்கின் கட்டடங்கள் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மழைநீரால் பாதிப்பு: அதே போல், மழைக்காலங்களில் இந்த ஓட்டைகள் வழியாக, தண்ணீர் உள்ளே புகுவதால், சேமித்து வைக்கப்பட்டுள்ள, லட்சக்கணக்கான புத்தகங்கள் சேதமடைகின்றன. கட்டடத்தின் தளம் மற்றும் சுவர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மோசமான நிலையில் காட்சியளிப்பதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், ''குடோனுக்கு அருகில் அரிசி கிடங்கு ஒன்று உள்ளதால், அங்கு வரும் ஏராளமான எலிகள் புத்தக அறைகளில் புகுந்துவிடுகின்றன. இதனால், புத்தகங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இங்கு பணிபுரிந்து வருகிறோம். குடோனில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீண்ட நாட்களாக மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்றார்.
ஆட்கள் பற்றாக்குறை: பாடநூல் கழகத்தில் ஆறு குடோன்கள் உள்ளன. இங்கு, அச்சகங்களில் இருந்து கொண்டுவரப்படும் பாடநூல்களை, குடோனில் வைப்பதற்கும், குடோனிலிருந்து புத்தகங்களை பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.ஒரு குடோனுக்கு குறைந்த பட்சம் இரண்டு ஊழியர்களாவது இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு குடோனுக்கு ஒருவர் மட்டுமே உள்ளதால், பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.