ராஜா மீது சி.பி.ஐ., மேலும் ஒரு வழக்கு?
ராஜா மீது சி.பி.ஐ., மேலும் ஒரு வழக்கு?
ராஜா மீது சி.பி.ஐ., மேலும் ஒரு வழக்கு?
ADDED : ஆக 26, 2011 11:23 PM

புதுடில்லி: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'வைமேக்ஸ்' எனும் புதிய பிராட்பேண்ட் வயர்லஸ் சேவையை, தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடுகள் நடந்துள்ளதை, முதற்கட்ட விசாரணையில் சி.பி.ஐ., கண்டுபிடித்துள்ளது.
இதையடுத்து, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா மீது, சி.பி.ஐ., விரைவில், வழக்கு பதிவு செய்யவுள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'வைமேக்ஸ்' என்னும் பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பெருநகரங்களில் வழங்க, தனியார் நிறுவனங்களை ஏஜன்டுகளாக நியமித்தது. முன்னதாக, ஏஜன்சி உரிமங்களை பெற, ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்தன. ஆனால், இதில், தகுதியில்லாத நிறுவனங்கள் ஏஜன்சி உரிமையை பெற்றுள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தெரியவந்துள்ளதால், அப்போது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த, ராசாவிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் விசாரணை துவக்கவுள்ளது.


