Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 24, 2011 09:35 PM


Google News

சாத்தூர் : சாத்தூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் சித்ரா(35) இவருக்கும் மதுரை, நேதாஜி தெரு,ஜெய்ஹிந்து புரத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் காமராஜ்க்கும் 2009, மார்ச் 2 ல் திருமணம் நடந்தது.

காமராஜ்க்கு திருமணத்தின் போது 25 பவுன்நகையும்,திருமணசெலவுக்கு ரூ 2 லட்சம்,பாத்திரங்கள் ரூ 50 ஆயிரத்துக்கும் மேலும் மணமகனுக்கு அரை பவுனில் மோதிரம் வரதட்சணையாக கொடுத்தனர்.மதுரையில் கூட்டு குடும்பமாக இருவரும் வாழ்ந்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாளில் கணவர் காமராஜ், மாமனார் ரெங்கசாமி, மாமியார் பாண்டியம்மாள்,மைத்துனர் செல்வராஜ்(35), நாத்தனார் பரமேஸ்வரி(30)மற்றும் இவரின் கணவர் சண்முகம் ஆகியோர் கூடுதலாக ரூ ஒரு லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கொடுமை படுத்தினர். இது குறித்து சாத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில் சித்ரா மனு செய்தார். கோர்ட் உத்திரவு படி சாத்தூர் மகளிர் போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us