/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தலையில் கல்லை போட்டவருக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட் உத்தரவுதலையில் கல்லை போட்டவருக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட் உத்தரவு
தலையில் கல்லை போட்டவருக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட் உத்தரவு
தலையில் கல்லை போட்டவருக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட் உத்தரவு
தலையில் கல்லை போட்டவருக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 16, 2011 11:58 PM
.அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தொட்டியான் குளத்தை சேர்ந்த வீரணன் மகன்
குமரவேல் (30).
இவர் குடித்து விட்டு தினமும் மனைவி முனியம்மாளை
துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து முனியம்மாள் தன் உறவினர்களான
முத்துஇருளன், அவருடைய மகன் மாசாணம் (38) ஆகியோரிடம் கணவனை கண்டிக்கும்படி
கூறியுள்ளார். இருவரும் குமரவேலை கண்டித்துள்ளனர். இந்நிலையில், மாசாணம்
ஊருக்கு அருகில் உள்ள கோயிலில் படுத்திருந்த @பாது அங்குவந்த குமரவேல்
அருகில் இருந்த முண்டுகல்லை எடுத்து மாசாணத்தின் தலையில் போட்டு விட்டு ஓடி
விட்டார். காயமடைந்த மாசாணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 2009
ல் நடந்த சம்பவம் குறித்த வழக்கு சப் கோர்டில் நடந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதி ஜெசிந்தா மார்டின் குமரவேலுக்கு ஏழு ஆண்டு ஜெயில் தண்டனை
விதித்தார்.