ADDED : செப் 02, 2011 11:14 PM
பல்லடம் : பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு, தெற்குபாளையம் பிரிவு, முத்து நகர், குங்குமப்பாளையம் உட்பட எட்டு இடங்களில் நேற்று முன்தினம் இந்து மக்கள் கட்சி இளைஞரணி சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.அவை நேற்று கள்ளிமேடு பாறைக்குழியில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம், இளைஞரணி செயலாளர் பரமேஷ்வரன், ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி துவக்கி வைத்தார்.