/உள்ளூர் செய்திகள்/தேனி/சில்வார்பட்டிக்கு பஸ் வசதி : தினமலர் இதழ் செய்தி எதிரொலிசில்வார்பட்டிக்கு பஸ் வசதி : தினமலர் இதழ் செய்தி எதிரொலி
சில்வார்பட்டிக்கு பஸ் வசதி : தினமலர் இதழ் செய்தி எதிரொலி
சில்வார்பட்டிக்கு பஸ் வசதி : தினமலர் இதழ் செய்தி எதிரொலி
சில்வார்பட்டிக்கு பஸ் வசதி : தினமலர் இதழ் செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 25, 2011 10:27 PM
தேவதானப்பட்டி : பாலம் வேலையால் சில்வார்பட்டிக்கு தடைபட்ட பஸ் போக்குவரத்தும் துவங்கியது.
துண்டிக்கப்பட்டிருந்த டெலிபோன் கேபிள் இணைப்பும் சரிசெய்யப்பட்டது. ஜெயமங்கலம் வராகநதியின் குறுக்கே புதிய பாலம் வேலை நடப்பதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் விடப்பட்டது. இதனால் சில்வார்பட்டி, டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி கிராமங்களுக்கு போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. பஸ்வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். இதே போன்று பாலம் வேலை செய்த போது டெலிபோன் வயர்கள் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. கலெக்டர் பழனிச்சாமியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வத்தலக்குண்டு, தேவனதானப்பட்டியில் இருந்து வரும் அரசு பஸ்கள் டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி வழியாக தர்மலிங்கபுரம் சென்று பெரியகுளம் செல்கிறது. பெரியகுளத்தில் இருந்து வரும் பஸ்கள் இதே வழித்தடத்தில் வந்து செல்கின்றன. பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் டெலிபோன் பழுதை சரி செய்தனர்.