Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு

ADDED : ஜூலை 15, 2011 01:01 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் மற்றும் தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கண்ணன் தலைமையில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் சிவராமன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், நேற்று காலை 11 மணியளவில் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தலைவாசல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை, வளர் இளம் பெண்கள் முன்னேற்ற நடவடிக்கை, நோய் தடுப்பூசி போடும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து விளக்கம் கேட்டனர். காட்டுக்கோட்டை ஆரம்ப சுகதார நிலையம், ஆத்தூர் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராம பகுதிகளில் புதிய வகை நோய் தாக்கம் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்தனர்.



இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறியதாவது: தமிழகத்தில், வளர் இளம் பெண்களுக்கும், குழந்தைகள் திருமணங்களும் பரவலாக நடத்தப்படுகிறது. குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 70 சதவீதம் பெண்களுக்கு ரத்த சோகை உள்ளதால், கர்ப்ப காலத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியாமல் இறக்கவும் நேரிடுகிறது. அதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை பரிசோதித்து ஊட்டசத்து மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம பகுதிகளில் உள்ள வளர் இளம் பெண்களுக்கு, இலவச பரிசோதனை செய்து, ரத்த சோகை கண்டறிப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழகத்தை ரத்த சோகை இல்லாத மாநிலமாக, உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆய்வின் போது, தலைவாசல் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us