/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,
நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,
நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,
நடுவீரப்பட்டில் 24 மணி நேர மருத்துவமனை: மா.கம்யூ.,
ADDED : ஆக 18, 2011 12:30 AM
கடலூர் : நடுவீரப்பட்டு மருத்துவமனையில் போதுமான டாக்டர்களை நியமனம் செய்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ., கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடுவீரப்பட்டு மா.கம்யூ., கட்சியின் 20வது கிளை மாநாடு நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். ராஜமாணிக்கம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளைச் செயலர் கணேசன் வேலை அறிக்கையை படித்தார். இதன் மீது பிரதிநிதிகள் விவாதம் நடத்தினர். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன் பேசினார். கிளைச் செயலராக கணேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் ஒன்றிய செயலர் மாதவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடுவீரப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். தெற்கு தெருவை இணைக்கும் பாலத்தை புதிதாக கட்ட வேண்டும். போலீசாருக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். நடுவீரப்பட்டு மருத்துவ மனையில் கூடுதல் டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


