ADDED : ஜூலை 13, 2011 10:31 PM
தேனி : ஜூலை 1 முதல் செப்., 30 வரையிலான காலாண்டிற்கு, உதவித்தொகை பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு இல்லாதவர் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 30ல் பதிவு செய்து ஐந்தாண்டுகள் காத்திருப்போராக இருக்க வேண்டும். 2011 ஜூன் 30ல், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், மற்றவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்தில் முடித்திருக்கவும், அல்லது குறைந்தது 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருப்பது அவசியம். அரசு, தனியார் துறையில் வேலை செய்பவராகவோ, கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிப்பவராகவோ இருக்க கூடாது.


