விழுப்புரத்தில் 2 பாம்புகள் மீட்பு
விழுப்புரத்தில் 2 பாம்புகள் மீட்பு
விழுப்புரத்தில் 2 பாம்புகள் மீட்பு
ADDED : ஜூலை 13, 2011 01:07 AM
விழுப்புரம் : வீட்டில் புகுந்த 7 அடி நீளமுள்ள பாம்பு
மீட்கப்பட்டது.விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியை சேர்ந்தவர்
மதியழகன்(49).
இவரது வீட்டின் சமையல் அறையில் நேற்று முன்தினம் காலை ஏழு
அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.இதே போல் திருச்சி சாலையில் உள்ள முருகன்
என்பவரது இன்ஜினியரிங் ஒர்க்ஸ் கடையில் நேற்று மதியம் ஏழரை அடி நீளமுள்ள
பாம்பு புகுந்தது. தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத்துறை ஏட்டு புஷ்பநாதன்
மற்றும் வீரர்கள் விரைந்து சென்று இரு இடங்களிலும் இருந்த பாம்புகளை
உயிருடன் மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.