அண்ணா கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணா கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணா கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2011 03:52 AM
பண்ருட்டி : தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நாள் கூலி 119 ரூபா# வழங்க வலியுறுத்தி அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் துரைராஜ், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் உதயகுமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் தண்டபாணி உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.


