Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசுக்கு காங்., கோரிக்கை

அரசுக்கு காங்., கோரிக்கை

அரசுக்கு காங்., கோரிக்கை

அரசுக்கு காங்., கோரிக்கை

ADDED : ஜூலை 13, 2011 10:16 PM


Google News
வால்பாறை : தேயிலை மற்றும் காபி எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக்கூலியாக ரூ.300 வழங்க மத்திய அரசு பார்லிமென்டில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வால்பாறை காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நகரத்தலைவர் கருப்பையா தலைமையில் நடந்தது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுகின்ற வகையில் அனைத்துவார்டுகளிலும் புதியநிர்வாகிகள் அமைப்பதுடன், வரும் 20ம் தேதிக்குள் வால்பாறை நகராட்சி உள் ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கட்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும். தேயிலை மற்றும் காப்பி எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சக்கூலியாக ரூ.300 வழங்க மத்திய அரசு பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us