Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

ADDED : செப் 25, 2011 01:40 AM


Google News
விழுப்புரம்:வளவனூர் அருகே சொரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்,40. கோலியனூர் மின் அலுவலகத்தில் மஸ்தூர் ஊழியராக பணிபுரிகிறார்.

இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டி விட்டு, காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கினர். அதிகாலை 2.30 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் நுழைந்து உள்ளே பிரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். தனி அறையில் தூங்கிய ஜெய்சங்கர் மனைவி வனஜா, மகள் சிந்துஜா, தங்கை ஜெயப்பிரியா கழுத்திலிருந்த தலா 1 சவரன் மொத்தம் 3 சவரன் செயினை அறுத்து சென்

றனர். திருடு போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.

தகவலறிந்த ஏ.டி. எஸ்.பி., பெருமாள், டி.எஸ்.பி., சேகர், வளவனூர் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர் வெங்கடேசன் மற்றும் மோப்ப நாய் மிஸ்கி வரவழைத்து சோதனை நடத்தினர். வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us