Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மனைவி எரித்து கொலை3 மாதங்களுக்கு பின் கணவன் கைது

மனைவி எரித்து கொலை3 மாதங்களுக்கு பின் கணவன் கைது

மனைவி எரித்து கொலை3 மாதங்களுக்கு பின் கணவன் கைது

மனைவி எரித்து கொலை3 மாதங்களுக்கு பின் கணவன் கைது

ADDED : செப் 14, 2011 03:11 AM


Google News
காஞ்சிபுரம்: மனைவியை எரித்துக் கொலை செய்த கணவன், மூன்று மாதத்திற்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சங்கர், 52. கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலர், 37. இவர்களுக்கு தீபா என்ற மகளும், விவேக் என்ற மகனும் உள்ளனர். சங்கர், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 12 ம் தேதி இரவு, சங்கர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறு öŒ#தார்.

தகராறைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றார். பலத்தக் காயமடைந்தவரை அருகிலிருந்தோர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான சங்கரை தேடிவந்தனர்.நேற்று பகல் ஒரு மணிக்கு, செங்கல்பட்டு புதிய பஸ்நிலையத்தில் சங்கர் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சங்கரின் மகனை அழைத்துக் கொண்டு பஸ் நிலையம் சென்றனர். அவர் தந்தையை அடையாளம் காட்டினார். போலீசார், சங்கரை மயக்கம் தெளியவைத்து, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us