ADDED : ஆக 11, 2011 11:04 PM
கடலூர் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்ட வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் சங்க கட்டடத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். செயலர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், இணைச் செயலர்கள் ஞானக்கண் செல்லப்பா, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தங்கராசு, முன்னாள் மாநில துணைத் தலைவர் புரு÷ஷாத்தமன், ஓய்வு பெற்ற அரசு உழியர் சங்க மாவட்ட பொருளாளர் மனோகரன் பேசினர். மாநில உதவிச் செயலர் முத்துகுமாரசாமி தலைமையில் 60 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. குமார் நன்றி கூறினார்.