ADDED : ஆக 03, 2011 10:36 PM
உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடனடி மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 உடனடி மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில், 400 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தலைமையாசிரியர் கிருஷ்ணன், உதவித்தலைமையாசிரியர் மாரிமுத்து ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர்.