/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மினிவேன் கவிழ்ந்து இருபது பேர் படுகாயம்மினிவேன் கவிழ்ந்து இருபது பேர் படுகாயம்
மினிவேன் கவிழ்ந்து இருபது பேர் படுகாயம்
மினிவேன் கவிழ்ந்து இருபது பேர் படுகாயம்
மினிவேன் கவிழ்ந்து இருபது பேர் படுகாயம்
ADDED : ஜூலை 14, 2011 12:05 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த ராயப்பனூரைச் சேர்ந்தவர் செல்லபாங்கி.
இவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காலை 20க்கும் மேற்பட்டோர் டாடா ஏசி மினி வேனில் நைனார்பாளையம் சென்றனர். டிரைவர் பெரியசாமி ஓட்டி சென்றார். வீ.கூட்ரோடு அருகே சென்றபோது வேனின் முன் பக்க டயர் திடீரென பஞ்சராகி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த கலியம்மாள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். அனைவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, பெரியம் மாள், கண்ணம்மாள், சின்னபொன்னு, பழனியம்மாள், பாப்பா மற்றும் டிரைவர் பெரியசாமி மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு சந்தித்து ஆறுதல் கூறி மேல் சிகிச்சைக் கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


