Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை

காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை

காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை

காமராஜர் பிறந்தநாள் : சிலைக்கு கலெக்டர் மரியாதை

ADDED : ஜூலை 15, 2011 09:55 PM


Google News

விருதுநகர் : விருதுநகரில் காமரார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு, கலெக்டர் பாலாஜி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். காமராஜரின் 109 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. காமராஜர் நினைவு இல்லம், நூற்றாண்டு விழா நினைவு மணி மண்டபம் மின் விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நினைவு இல்லத்தின் முன்பு ராட்டை மூலம் நூற்பு வேள்விகள் நடத்தப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காமராஜர் நினைவு இல்லம் மற்றும் நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் மு. பாலாஜி, காமராஜரின் சகோதரி மகள் கமலாதேவி, மாணிக்கம் தாகூர் எம்.பி., நகராட்சி தலைவர் கார்த்திகா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்மொழி அமுது பி.ஆர்.ஓ., உதவி இயக்குனர்(கதர் கிராம தொழில்கள்) பி. நாகரத்தினம் உட்பட பலரும் பங்கேற்றனர். விருதுநகர் நாடார் பேரவை சார்பில் நகராட்சி அலுவலகத்திலிருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து சென்று, காமராஜர் மணிமண்டப சிலைக்கு பால் அபஷேகம் செய்தனர்.



சாத்தூர்: சாத்தூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்ததின விழா எஸ்.அய்யப்பன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட காங்., தலைவர் தங்கவேல்,மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கபட்டோரின் குழந்தைகள் 30 பேருக்கு ஸ்கூல்பேக்,நோட்டு புத்தகங்களை விருதுநகர் லோக்., தொகுதி தலைவர் ஜி.வி.கார்த்திக் வழங்கினார். முக்குராந்தலில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பிரேமானந்த் நன்றி கூறினார்.



வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நகர, ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காமாரஜர் பிறந்தநாள் விழா நடந்தது நகர தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர்கள் சுந்தரம், தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்.புதுப்பட்டி நகர தலைவர் திருமலை வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுது பொருட்களையும், முதியோர்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். நகர செயலாளர் ஹனீபா, இளைஞரணி தொகுதி தலைவர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் சத்யமூர்த்தி உட்பட கட்சியினர் கலந்து கொண்டர். ஆலோசணை குழு தலைவர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.



சிவகாசி: சிவகாசியில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுவித்தனர். நகர காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில், ஒன்றிய தலைவர்(பொறுப்பு) பழனிச்செல்வம் முன்னிலையில் ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜகோபால், லோக்சபா தொகுதி தலைவர் கார்த்திக் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகராட்சி துணை தலைவர் அசோகன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்டபொருளாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் கடற்கரை தங்கம், நகர செயலாளர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கதிரேசன், நகர பொருளாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* சிவகாசி மேற்கு நடார் உறவின்முறை சார்பில் ரிசர்வ் லைனில் தலைவர் குமரவேல் தலைமையில், தொழில் அதிபர்கள் மாதவன், பிரகாஷ், கணேஷ் முன்னிலையில் பலர் ஊர்வலமாக வந்து மாலை அணி வித்தனர்.

* தே.மு.தி.க., சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் வைரமுனி தலைமையில் நகர செயலாளர் முருகன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

* சிவகாசி இந்து நாடார் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா தாளாளர் வேலாயுதம் தலைமையில் நடந்தது. மணிச்செல்வி காமராஜர் படத்தை திறந்து வைத்தார். ஆசிரியை செல்வகுமாரி வரவேற்றார். ஆசிரியைகள் மாரியம்மாள், சகாய கிளாஸ்டிஸ் வினிட்டா, ஜெயபிரபா, பால்ராமேஸ்வரி ஆகியோர் பேசினர். ஆசிரியை விஜயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை செல்வராணி நன்றி கூறினார்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us