ADDED : ஆக 09, 2011 01:13 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ.உ.சிதம்பரனார் கலையரங்கம் அடிக்கல் நாட்டுவிழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் அம்மையப்பன் வரவேற்றார். கூட்டத்தில் விழா பணிகளை கவனிக்க தனிப்பொறுப்புடன் கூடிய ஏழு குழுக்கள் அமைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் சுந்தரமகாலிங்கம், இளைஞரணி தலைவர் பாண்டி, செயலாளர் பேச்சியப்பன் தீர்மானங்களை விளக்கி பேசினர். பிச்சைராமன் நன்றி கூறினார்.


